சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கிய கமல்!

Makkal Needhi Maiam

by Suresh, May 16, 2018, 14:25 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மக்களுடனான சுற்றுப்பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு சென்ற கமல், அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து திறந்த வாகனத்தில் நின்றபடி ரயில்நிலையம், தென்தாமரைக்குளம், கீழ் மணக்குடி வழியாக குளச்சல் பகுதிக்கு சென்றார்.

அங்கு சிறிது நேரம் மக்கள் மத்தியில் உரையாற்றிய கமல், "தமிழகத்தின் தாக்கமாகவும் தேக்கமாகவும் எது இருக்கிறது என்பதை அறிவதுதான் நமது வேலை. இப்பொழுது நான் மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன்.

காத்திருக்கும் உங்கள் கண்களில் தெரியும் நேர்மை எனக்கு தெரிகிறது. உங்களிடம் உள்ள நேர்மை அரசியலுக்கு வர வேண்டும்" எனக் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கிய கமல்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை