தூத்துக்குடி கலவரம் எதிரொலி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

May 22, 2018, 13:59 PM IST

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் அவசரஆலோசனை நடத்தினார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைபெற்ற பெரிய அளவிலான போராட்டம் கலவரமாக மாறியது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் அவரச ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அடுத்தகட்ட முக்கிய ஆலோசனை நடத்தியாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தூத்துக்குடி கலவரம் எதிரொலி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை