தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு யார் காரணம்?- நீதிமன்றம் கேள்வி

’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார்?’ என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், `போராடிய மக்களுக்கு முதலி கலைந்து சென்றுவிடுமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் மோதல் போக்கை கடைபிடித்தனர். இதனால், வேறு வழியில்லாமல் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

மக்கள் அதிகாரம், நாம் தமிழர் கட்சி போன்ற சில அமைப்புகள் ஊடுருவி வன்முறையை கையில் எடுத்தனர்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அனைத்தையும் பெரும்பான்மையான மக்கள் மறுக்கின்றனர். ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கையோ, ரப்பர் குண்டுகளோ பயன்படுத்தப்படவில்லை.

போலீஸ் நேரடியாக துப்பாக்கி சூட்டில் இறங்கியது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வசாரணைக்கு வந்தது. அப்போது, `மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த எது காரணமாக இருந்தது. யார் துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது. இது குறித்து இன்னும் 5 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்.

முக்கியமாக, தூத்துக்குடியில் போராட்டத்துக்கு பின்னர் காணாமல் போனவர்களின் குடும்பங்களை விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்யக் கூடாது' என்று கறாரன உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds