ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்: ஸ்டாலின் தலைமையில் போராட்டம்

by Rahini A, Jun 23, 2018, 10:36 AM IST

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக-வின் செயல்தலைவர் ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுக-வினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் போராட்டம் நடத்தி வருகிறார்.

மேலும் தனது போராட்டக் குறிக்கோள் குறித்து ஸ்டாலின் கூறுகையில், “சேலம் 8வழி சாலை திட்டப்பணிகளை மக்களின் கருத்துகளை கேட்ட பின்னர் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணிகளை ஆளுநர் செய்வது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த திடீர் போராட்டம் நடைபெறுகிறது” எனக் கூறியுள்ளார்.

You'r reading ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்: ஸ்டாலின் தலைமையில் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை