போராட்டங்கள் தமிழக முன்னேற்றத்தைப் பாதிக்கும்- பிரேமலதா விஜயகாந்த்
”தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும்” என தேமுதிக-வின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல், சமூக மற்றும் பொருளாதார நலன் குறித்து தேமுதிக-வின் முக்கிய உறுப்பினரும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனவியுமான பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும். சேலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விமான நிலையம் வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
You'r reading போராட்டங்கள் தமிழக முன்னேற்றத்தைப் பாதிக்கும்- பிரேமலதா விஜயகாந்த் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :