வாட்ஸ் அப் மூலம் நடிகைகளை குறி வைக்கும் கும்பல்
வாட்ஸ் அப் மூலம் நடிகைகளை குறி வைக்கும் கும்பல் கைது
நடிகைகள் சிலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வாட்ஸ் அப் மூலம் வலை விரித்த கும்பலை சேர்ந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது.
அதில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசையை தூண்டும் வகையில் குறுந்தகவல் வந்துள்ளது. நடிகைகள் சிலரின் புகைப்படங்களை எடுத்த ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் அதே மெசேஜை தனித்தனியாக அனுப்பியுள்ளது.
56 நடிகைகளின் புகைப்படங்களுடன் உலா வந்த அந்த வாட்ஸ் அப் தகவல்களை திரட்டி ஜெயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
ஜெயலட்சுமியின் வாட்ஸ் அப் எண் மூலமாக சாதூர்யமாக பேசி அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு அந்த கும்பலை போலீசார் வரவழைத்தனர். அப்போது, கவியரசன், முருகபெருமாள் ஆகிய இருவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அரசியல் பிரமுகர்கள், விஐபி, விவிஐபி என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிடிபட்ட இருவரிடமும் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You'r reading வாட்ஸ் அப் மூலம் நடிகைகளை குறி வைக்கும் கும்பல் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News