தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும் அல்லது மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்றைய வானிலை செய்தி அறிக்கையை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளனர்.
You'r reading தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News