முதியவர் தவறவிட்ட பணம்...திருப்பி கொடுத்த காவலர்

முதியவர் தவறவிட்ட 30ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஊர்காவல் படை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
சென்னை, புரசைவாக்கத்தில் வசித்து வரும் ராஜன், ஓட்டேரி காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜன்  புரசைவாக்கம், கந்தப்பா ஆச்சாரி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே ரப்பர் பேண்டால் சுற்றப்பட்ட பணக்கட்டு இருந்ததை கண்டார்.
 
உடனே, ராஜன் அப்பணத்தை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.30,000/- மதிப்புள்ள 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. பணக்கட்டை  வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவங்களை  ராஜன் எடுத்து கூறினார். 
 
இந்நிலையில்,புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்ற முதியவர், வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்து, தனது வீட்டில் போர் போடுவதற்காக எங்களது தெருவிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மிலிருந்து பணம் ரூ.30,000/-ஐ எடுத்து கொண்டு, ரப்பர் பேண்டால் சுற்றி தனது பாக்கெட்டில் வைத்து, வீட்டிற்கு வரும் வழியில் தவறவிட்டதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், கண்டுபிடித்து தரும்படியும் புகார் கொடுத்தார்.
 
உடனே, முதியவரிடம் அதற்கான ஆவணங்களையும், அவர் கூறிய ரூபாய் நோட்டு அடையாளங்களையும், ஊர்காவல் படை  காவலர் ராஜன் ஒப்படைத்த பணத்தையும் ஒப்பிட்டு பார்த்தபோது, அது முதியவரின் பணம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்த அந்த பணம் முதியவர் கஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
18 வருடங்களாக ஊர்க்காவல்படையில் எலக்டிரிஷியனாக பணிபுரிந்த ராஜன், கடந்த 3 ஆண்டுகளாக ஓட்டேரி காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
 
தெருவில் கிடந்த பணத்தை  உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த ராஜனை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாரட்டினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds