மீண்டும் தலைதூக்கும் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில், கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், நேற்று மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது.
அதன்படி, நேற்று பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசல் விலையில் 95 காசுகளும் உயர்ந்தது. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.79.87 ஆகவும், டீசல் விலை ரூ.72.43 ஆகவும் இருந்தது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
You'r reading மீண்டும் தலைதூக்கும் பெட்ரோல், டீசல் விலை Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News