கருணாநிதி உடல்நிலை சீரானதை அடுத்து வீட்டிற்கு புறப்பட்டார் ஸ்டாலின்

Jul 29, 2018, 23:57 PM IST

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிவித்ததை அடுத்து, ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு புறப்பட்டனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு ரத்த அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து அவரை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில மணி நேரத்திற்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. இதனால், கருணாநிதியின் குடும்பத்தினர், திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த தகவல் பரவியதை அடுத்து, மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால், சிறிது நேரத்தில் கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்துவிட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும், ஆ.ராசாவும் கருணாநிதியின் உடல் நிலை சீராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள் உள்பட அவரது குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டனர்.

You'r reading கருணாநிதி உடல்நிலை சீரானதை அடுத்து வீட்டிற்கு புறப்பட்டார் ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை