கமிஷனர் அலுவலகத்தில் கனிமொழி புகார்

தி.மு.க எம்.பி. கனிமொழி பெயரில், போட்டோஷாப் செய்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Kanimozhi

தி.மு.க தலைவர் கருணாநிதி 4-ஆவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் அவரை பார்க்க வந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக, ‘ஆன்மிகவாதிகள் கருணாநிதியை பார்க்க வேண்டிய அவசியமில்லை’ எனக் கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் கூறியது போல் ஃபோட்டோஷாப் ஒன்று வைரலானது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கனிமொழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கனிமொழி மீது விரோதத்தையும், குரோதத்தையும் உருவாக்கவும், இந்துக்களுக்கும் அவருக்குமான பந்தத்தை பிரிக்கவும் சதித்திட்டம் தீட்டப்பட்டு செய்திகள் பரப்பப்படுகிறது.

“கனிமொழியின் டுவிட்டர் கணக்குபோன்று போட்டோஷாப்பில் உருவாக்கி, ‘அதில் அவர் இந்து மதத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டது போன்ற கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.”

“நாத்திக சித்தாந்தத்தை தி.மு.க கடைபிடித்தாலும், அனைத்து மதத்தினரின் உணர்வுகளை மதிக்க அண்ணா, கருணாநிதியால் தி.மு.க-வினர் அனைவரும் பக்குவப்படுத்தப்பட்டுள்ளனர். அதை, கனிமொழி தன் அரசியல் வாழ்வில் பல தருணங்களில் வெளிப்படுத்திவருகிறார்.

மூட நம்பிக்கைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மட்டுமே கனிமொழி எதிரி. எனவே, அவர் குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds