டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவித்த நிலையில், இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழக அரசு சார்பில் அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், சார் பதிவாளர், வருவாய்த்துறை, உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி என மொத்தம் 1199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் 2 தேர்வு வரும் நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான கடைசி தேதி செப்டம்பர் மாதம் 9ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கான மற்ற விவரங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
You'r reading டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News