Advertisement

உள்ளாட்சி தேர்தல் வழக்கு... இன்று விசாரணை!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

High Court

உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், 2017-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனை தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது ஆஜரான, தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தவுடன், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பபடும் என விளக்கம் அளித்தனர்.

உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்தரப்பு வாதம் செய்தது. இதனிடையே தலைமை நீதிபதியாக இருந்த இந்திராபானர்ஜி உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சுந்தர் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்