முல்லைபெரியாறு அணை.. உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கேரள மாநிலத்தில் அதிக அளவு வெள்ளம் சூழ்ந்திருப்பதால் முல்லைபெரியாறு நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதற்கு கடிதம் மூலம்  பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு உள்ளதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 
 
இதனிடையே, கேரளாவை சேர்ந்த ரசூல் என்பவர், முல்லைபெரியாறு நீர்மட்டத்தை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "முல்லை பெரியாறு அணையை நிர்வகிப்பதில் தமிழகம் மற்றும் கேரளா இடையே ஒற்றுமை இல்லாத நிலையில் கேரள மக்களுக்கு  சிக்கல் உருவாகி உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்,  மேலாண்மையை கண்காணிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது. 
 
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. "முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியகூறு உள்ளதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
"தேசிய பேரிடர் மேலாண்மை குழு, முல்லை பெரியாறு துணை குழு ஆய்வு செய்ய வேண்டும். அந்த குழுவின் முடிவை தமிழக அரசு  கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்" எனவும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 24-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கேரள தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds