பொறியியல் படிப்பு கலந்தாய்வு... மாணவர்கள் புறக்கணிப்பு

தமிழ்நாடு பொறியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் தகுதி பட்டியலில் இருந்த மாணவ மாணவியர் 20,000 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Anna University

தமிழ்நாட்டில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான எஞ்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு சேருவதற்கான கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

மாணவ மாணவியர் சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் இணைய வழியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கவும், கலந்தாய்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநிலம் முழுவதும் குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்று என்ற வகையில் 42 உதவி மையங்களும் பொறியியல் கலந்தாய்வுக்கென அமைக்கப்பட்டிருந்தன. ஜூலை 25ம் தேதி முதல் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வந்தது.

முதல் கட்ட கலந்தாய்வுக்கென தகுதிபெற்றோர் 10,734 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் 7,303 பேரே கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டத்தில் 18,513 பேருக்கு 13,288 பேரும், மூன்றாம் கட்டத்தில் 25,710 பேருக்கு 18,534 பேரும், நான்காவது மற்றும் இறுதி கட்டத்தில் அழைக்கப்பட்ட 23,212 பேருக்கு 18,406 பேரும் மட்டுமே கலந்தாய்வில் கலந்துகொண்டுள்ளனர்.

மொத்தத்தில் அழைக்கப்பட்டிருந்த 78,169 தகுதிபெற்ற மாணவ மாணவியருள் 58,744 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். 19,425 பேர், அதாவது தகுதி பெற்றவர்களில் 25 சதவீதத்தினர் கலந்தாய்வை புறக்கணித்துள்ளனர்.

ஒரு காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளைக்கூட மாணவரும் பெற்றோரும் முற்றுகையிட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை கூட மாணவ மாணவியர் புறக்கணித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds