பசுமை வழிச்சாலை... உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

பசுமை வழிச்சலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Aug 21, 2018, 18:15 PM IST

சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

8 way road

சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக அரசு, விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகளை கையகப்படுத்தி வந்தது.

இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது.

மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் தடை விதிக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையப்படுத்தக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading பசுமை வழிச்சாலை... உயர் நீதிமன்றம் இடைக்கால தடை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை