கொட்டித்தீர்த்த கனமழை: சென்னை வாசிகள் உற்சாகம்
சென்னையில் இன்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தால், சற்று வெயிலில் இருந்து தணிந்து உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மழை பெய்யும் என்று கடந்த சில நாட்களாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கு மாறாக வெயிலின் தாக்கமே அதிகமாக இருந்து வருகிறது. சென்னையில் சொல்லவே வேண்டாம். மே மாத வெயிலைப் போல் மக்களை வதைத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால், சென்னை மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
You'r reading கொட்டித்தீர்த்த கனமழை: சென்னை வாசிகள் உற்சாகம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News