உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி நோட்டாவிடம் தோற்றது - தலித் போராளி கிண்டல்

உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி நோட்டாவிடம் தோற்றது என்று குஜராத் மாநிலத்தை சேர்ந்த தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி கிண்டல் செய்துள்ளார்.

Dec 25, 2017, 20:03 PM IST

உலகின் மிகப்பெரிய ‘மிஸ்டு கால்’ கட்சி நோட்டாவிடம் தோற்றது என்று குஜராத் மாநிலத்தை சேர்ந்த தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி கிண்டல் செய்துள்ளார்.

Jignesh Mevani BJP

முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில், டிடிவி தினகரன் 81,317 வாக்குகள் பெற்று முதல் இடத்தையும், அதிமுக மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், திமுக மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,860 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றன.

பாஜக கரு.நாகராஜன் 1,417 வாக்குகள் பெற்றார். ஆனால், அவரை விட அதிகமாக நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது. நோட்டாவிற்கு 2373 வாக்குகள் விழுந்தன. இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மேவானி, “தமிழகத்தில் மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த, உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி, தமிழகத்தில் நடந்த தேர்தலில் 1,417 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஓட்டுகள் 2,373 வாக்குகளைப் பெற்ற நோட்டாவை விடவும் குறைவானது.

ஊத்தாப்பத்தின் மேல் சேர்க்கப்படும் சுவை கூட்டும் பொருளை பாஜகவினர் ஜீரணித்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி நோட்டாவிடம் தோற்றது - தலித் போராளி கிண்டல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை