மக்கள் அதிமுகவின் உண்மை பிரதிநிதி தினகரன் பக்கம் - சசிகலா புஷ்பா

அதிமுகவின் உண்மையான பிரதிநிதி என்பதை டிடிவி தினகரன் நிரூபித்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

Dec 26, 2017, 10:48 AM IST

அதிமுகவின் உண்மையான பிரதிநிதி என்பதை டிடிவி தினகரன் நிரூபித்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

நடைபெற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டும் இமாலய கட்சிகளையும் பெரும்பாண்மை வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேலும், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் என்ற இரட்டை கூட்டணி தலைமையையும் சின்னாபின்னமாக்கினார் தினகரன். இதனால், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தலைமையின் கீழ் செயல்படும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கின்றனர். சில முக்கிய அமைச்சர்களையும் நேற்று திங்கள்கிழமை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அடையாறு இல்லத்துக்குச் சென்று டி.டி.வி.தினகரனைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் தெரிவித்த சசிகலா புஷ்பா, “முதல்வர், துணை முதல்வர் முழு அதிகாரத்தையும் பிரயோகித்துக் கூட ஆர்.கே.நகரில் வெற்றி பெற முடியவில்லை.

இது மக்கள் டிடிவி தினகரன் பக்கமே இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அதிமுகவின் உண்மையான பிரதிநிதி என்பதை தினகரன் நிரூபித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இது குறித்து கூறிய தினகரன், “உங்கள் தலைமையின் கீழ் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்றார். தவறுகளை விட்டு வருபவர்களை புறக்கணிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading மக்கள் அதிமுகவின் உண்மை பிரதிநிதி தினகரன் பக்கம் - சசிகலா புஷ்பா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை