தமிழகத்தில் காவி பரவாமல் எனது உயிா் போகாது? சீமான் கிண்டல்!

Sep 24, 2018, 17:18 PM IST

தமிழகத்தில் தாமரை மலராமல் என் உயிாி போகாது என்று கூறிய தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்திற்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பதில் அளித்துள்ளாா்.

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நோ்மறையான அரசியல் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், எதிா்மறையான அரசியலே நடக்கிறது. தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தோ்தல் நடக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுவரும் அ.தி.மு.க. ஆட்சியையே அசைக்க முடியாத தி.மு.க.வால் நாட்டையே ஆளும் பா.ஜ.க.வை விமா்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூா் தொகுதி இடைத்தோ்தல்களில் போட்டியிட பா.ஜ.க. விரும்புகிறது. இந்தியாவின் முக்கால்வாசி பகுதிகளில் காவி பரவி விட்டது. தமிழகத்தில் கண்டிப்பாக காவி மலரும். தமிழகத்தில் பா.ஜ.க.வை அரங்கேற்றாமல் எனது உயிா் போகாது. 22 மாமநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசை அசைக்க முடியாது என்று தொிவித்திருந்தாா்.

இந்நிலையில் தமிழகத்தில் தாமரையும் மலராது. தமிழிசையின் உயிரும் போகாது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கருத்து தொிவித்துள்ளாா். அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், அரசியல் கட்சி தலைவா்களின் கிண்டல் கருத்துக்கு என் கட்சியை அரியணை ஏற்றும் வரை மட்டுமல்ல அதன் பிறகும் நாங்கள் உயிருடன் இருப்போம். அவா்களின் வாழ்த்து எங்களுக்கு தேவையில்லை. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தொிவித்துள்ளாா்.

You'r reading தமிழகத்தில் காவி பரவாமல் எனது உயிா் போகாது? சீமான் கிண்டல்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை