ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரிடம் மனு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க போவதாக ஆளுநர் கூறியதாக ராஜீவ் காந்தி கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது உடன் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  சென்னையில் இன்று சந்தித்து மனு அளித்தனர்.

7 பேர் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர்களை விடுவிக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரிடம் முறையிட்டதாக தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தமிழக அரசின் பரிந்துரை குறித்து முடிவு எடுக்கப் போவதில்லை என்று ஆளுநர் உறுதியளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் கூறியதாவது
       குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்றும், அவர்கள் இறக்கும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் அனைவரும் சேர்ந்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.

இவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று அனைவரும் சேர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் கேட்டனர். அதன் பின்னர் ஆளுநர் கூறியதாவது, உங்கள் மனுவை நாங்கள் பரிசளிப்போம். அதுவரை காத்திருங்கள் என்று கூறினார். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்குப் எதிராக மத்திய அரசு முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த 6 தேதி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுப்பேரையும் சட்டப் பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எதிராக சிலர் களமிறங்கியுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds