தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான் - குஷ்பூ அதிரடி

டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Dec 27, 2017, 12:38 PM IST

டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, ”ஓபிஎஸ், ஈபிஎஸ் ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தால் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம்.

ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. டிடிவி தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டிடிவி தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வந்து விடாது. தேர்தலுக்காக ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டதால், டிடிவி தினகரனுக்கு அனுதாப வாக்குகளே கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading தினகரனின் குறிக்கோள் தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது தான் - குஷ்பூ அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை