குட்கா வழக்கு- சிபிஐ பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ்...
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 3 பேர் ஜாமின் கோரிய மனுவுக்கு அக்டோபர் 3ம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தங்களுக்கு எதிராக சிபிஐ சார்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும் எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ தங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், அக்டோபர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
You'r reading குட்கா வழக்கு- சிபிஐ பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ்... Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News