கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்

அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் 90 சதவீதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த மாதம் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில், அக்டோபர் 4ம் தேதி ஒருநாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆசிரியர்களின் போரா ட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதற்கட்டமாக, அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சம்பளம் பிடித்தம் செய்வது தொடர்பான உத்தரவை அனுப்பினார். அதில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு என்பது அரசுப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையையும் மீறி, கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 90 சதவீதம் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்காக சென்னை மாநகரில் மட்டும் 50 % ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில், நவம்பர் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு வந்துள்ளனர். ஊழியர்கள் வராமல் வெறிச்சோடி கிடந்த ஒரு சில அறைகள் பூட்டுப்போட்டு மூடப்பட்டன. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்து, எழிலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :