சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தமா?

சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது சாத்தியமில்லை என தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை பரங்கிமலையில் மின்சார ரயில் விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியானதை அடுத்து, மெட்ரோ ரயில்களை போன்று புறநகர் ரயில்களிலும் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சதீஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தெற்கு ரயில்வே சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவு பொருத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகள் பொருத்துவது சாத்தியம் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னையின் தட்பவெப்பநிலையில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் காற்றோட்டம் இருக்காது எனவும் தானியங்கி கதவுகள் பொருத்தினால் அனைத்து புறநகர் ரயில்களிலும் குளிர்சாதன வசதி செய்ய வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மும்பையில் 6 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி கதவுகள் கொண்ட ரயில்களில் கட்டணம் சென்னையை விட, 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக மனுவில் கூறப்பட்டது.

டெல்லியில் உள்ள ரயில்வே வாரியமும், லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு கழகமும் இணைந்து ரயில் பெட்டிகள் வடிவமைப்பை மாற்றுவது குறித்து எடுக்கும் முடிவு தெற்கு ரயில்வேயின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை புறநகர் ரயில்கள் அனைத்திலும் தானியங்கி கதவு பொருத்துவதற்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds