ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

Ration shop employees strike withdraw

Oct 17, 2018, 22:06 PM IST

தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

strike

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் கடந்த 15ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, கூடுதல் பதிவாளர் கோவிந்தராஜன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில், ரேசன் கடை ஊழியர்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

You'r reading ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் வாபஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை