எஸ்.சி-எஸ்.டி. காலியிடங்களை நிரப்ப 6 மாதம் உயர் நீதிமன்றம் கெடு
HC Order to fill SC-ST vacancies
அரசு துறைகளில் காலியாக உள்ள 2,670 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழக அரசின் பலதுறைகளில் காலியாக உள்ள எஸ்சி., எஸ்.டி பணியிடங்களை நிரப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரங்களை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குரகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தேர்வு நடைமுறைகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த நடைமுறை முன்னேற்றம் தொடர்பாக நவம்பர் 16ஆம் தேதி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.
You'r reading எஸ்.சி-எஸ்.டி. காலியிடங்களை நிரப்ப 6 மாதம் உயர் நீதிமன்றம் கெடு Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News