செங்கல்பட்டு-பெருங்களத்தூர் இடையே டிராபிக்
heavy traffic between Chengalpattu-Perungalathur
விஜயதசமி விடுமுறை நாட்கள் முடிந்து சொந்தஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி கடந்த நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் இன்று சென்னைக்கு திரும்பினர். சொந்த வாகனங்களில், தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
இதன் காரணமாக செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரை அதிக வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறைமலைநகரில் இருந்து பெருங்களத்தூர் வரை வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. இதனால், திங்கள் கிழமை அலுவலகத்திற்கு செல்லலாம் என வந்தவர்கள் கடும் சிரமப்பட்டனர்
அதிக வாகனங்கள் வரும்போது வண்டலூர் மேம்பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்வது வழக்கம் ஆனால் எந்த போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிபட்டனர்.
You'r reading செங்கல்பட்டு-பெருங்களத்தூர் இடையே டிராபிக் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News