தினகரன் பண்ணை வீட்டில் சென்சார் மூலம் சோதனை

டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சென்சார் கருவி மூலம் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

Jan 8, 2018, 15:01 PM IST

டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சென்சார் கருவி மூலம் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இதில் 2 ஏக்கர் பரப்பளவில் 6 வீடுகள் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது.

நேற்று அங்குள்ள பண்ணை வீட்டில் வருமானவரித்துறை ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆய்வின் போது சீல் வைத்து சென்ற அறையை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டி.டி.வி பண்ணை வீட்டில் சென்சார் கருவி மூலம் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. மண்ணுக்குள் ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா என கண்டறிய சென்சார் கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

You'r reading தினகரன் பண்ணை வீட்டில் சென்சார் மூலம் சோதனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை