ட்ரோன் பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள் - மத்திய விமான போக்குவரத்து துறை

‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

"ட்ரோன்" எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை உளவு பார்ப்பது, காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பது என்பது போன்ற பல தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன. சந்தைகளில் அதிகமாக விற்கபடுகின்ற விளையாட்டு என்றால் அது ஏரோ மாடலிங் வகையை சேர்ந்த விளையாட்டுகள் தான்.

ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை விற்கபடுகின்ற இவைகளை பலரும் வாங்கி உயரத்தில் பறக்கவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் ஆளில்லா விமானங்களை தொழில்ரீதியாக பயன் படுத்தும்போது காவல் துறையினரிடமும், விமான போக்குவரத்துத் துறையிடமும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

ட்ரோன்கள் அடையாள எண், ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி ஆகிய சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களை நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என அதன் எடைகளை கொண்டு 5 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம்.

அதே போன்று ட்ரோனை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இயக்க வேண்டும். 10-ம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். ட்ரோனின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லும்.

பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும். கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது.

பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மற்ற விமான நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது. சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரையில் இருந்து 500 மீட்டரைத் தாண்டி ட்ரோனை இயக்க முடியாது.

மேலும், ட்ரோன்களை டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமைச் செயலகங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகிய இடங்களின் சில பகுதியில் இருந்து இயக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds