சினிமாவில் நடிக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார்?

Writer Rajeshkumar: Going to act in Cinema?

by Devi Priya, Dec 8, 2018, 16:12 PM IST

பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரை சினிமாவில் நடிப்பதற்கு ஒரு முன்னணி டைரக்டர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்தாண்டு வெளியான "குற்றம் 23" படத்தின் கதையாசிரியர் ராஜேஷ்குமார். அதன்பின் விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்" என்ற படத்தின் கதை தன்னுடையது என்று கூறி பரபரப்பை எற்படுத்தியிருந்தார் ராஜேஷ்குமார்.

இந்த நிலையில் , தமது பேஸ்புக் பக்கத்தில் தன்னை சினிமாவில் எழுத்தாளர் வேடத்தில் நடிப்பதற்காக ஒரு முன்னணி டைரக்டர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதற்கான பதிலை ஓட்டுஎண்ணிக்கை முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து ராஜேஷ்குமார் சினிமாவில் நடிப்பாரா? என்ற கேள்வி பல தரப்பில் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!

You'r reading சினிமாவில் நடிக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார்? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை