புகை மண்டலமாக மாறிய சென்னை: விமான சேவை கடும் பாதிப்பு

by Isaivaani, Jan 13, 2018, 10:28 AM IST

சென்னை: போகி பண்டிகையால் ஏற்பட்ட புகை மற்றும் அடர் பனிமூட்டத்தால் சென்னையில் இன்று விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தரையிறங்க முடியாமல் திணறிய 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

மார்கழி மாதத்தின் இறுதி நாளும், தை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் தமிழர்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில், மக்கள் பழைய பொருட்களை எரித்து மகிழ்ந்தனர். ஆனால், இதன் எதிரொலியாக, சென்னையின் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு கடும் புகை மண்பலமாக காட்சி அளிக்கிறது.

போகி புகையும், பனி மூட்டமும் சேர்ந்து எதிரில் வரும் வாகனம் கூட தெரியாத அளவிற்கு மறைத்துவிட்டது. இதனால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், காற்று மாசுவும் அதிகளவில் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, சென்னையில் விமான சேவை இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புகை மண்டலத்தால், ஓடுபாதை தெரியாமல் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திணறின.

இதானல், சென்னையில் இன்று அதிகாலை முதல் விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கவில்லை. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்பவில்லை.

சென்னை விமான நிலையத்திற்கு, லண்டனில் இருந்து வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதுபோன்று, மொத்தம் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading புகை மண்டலமாக மாறிய சென்னை: விமான சேவை கடும் பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை