சிபிஐ நெருக்கியும் ஆட்டம் அடங்கவில்லை!- கலெக்சனை விடாத விஜயபாஸ்கர் பி.ஏ!

சிபிஐ விசாரணையால் அதிமுக அமைச்சர்கள் கதிகலங்கியிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர் பதவி பறிபோகலாம் என்ற நிலையிலும், சுகாதாரத்துறையில் வேகம் வேகமாக கலெக்சன் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் உதவியாளர் சரவணன்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியின் மூலம்
அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எந்தெந்த தேதியில் எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரம் தேதிவாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த டைரி தகவலை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்த தமிழக அரசுக்கு வருமானவரித் துறை பரிந்துரை செய்தது. ஆனால் விசாரணை தாமதமானதால் சி.பி.ஐ விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குட்கா ஊழல் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்த வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

சுமார் ஒன்பது மணி நேரத்துக்கும் மேல் நீடித்த விசாரணையால் அதிர்ச்சிடைந்துவிட்டார் அமைச்சர். அவரது உதவியாளர் சரவணனிடம் 3 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.

இதைப் பற்றி எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசினார் விஜயபாஸ்கர். விவகாரம் சீரியஸாகச் சென்று கொண்டிருக்க, மந்திரி உதவியாளர் சரவணன் சுகாதாரத்துறையில் வசூல் மேளாக்களை அரங்கேற்றி வருகிறாராம்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் ஆலோசகராக இருக்கும் ஆனந்தன் மூலமாக நேற்று சில நிறுவனங்களிடம் பேசியுள்ளனர். நியூட்ரிஷியன் கிட் தொடர்பான ஒப்பந்தத்துக்கு வர வேண்டிய தொகைகளைப் பற்றி இருவரும் பேசியுள்ளனர்.

இந்த விஷயத்தில் சில நிறுவனங்களை மிரட்டியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத சுகாதாரத்துறை அதிகாரிகள், சிபிஐ விசாரணையால் நெருக்கடி முற்றிய போதும், இவர்கள் வசூலை நிறுத்தவில்லை. பதவி பறிபோவதற்குள் வர வேண்டியதைக் கறக்கும் வேலையை நடத்தி வருகிறார்கள். எந்தக் காலத்திலும் இவர்கள் திருந்தப் போவதில்லை எனத் தலையால் அடித்துக் கொள்கிறார்களாம்.

-அருள் திலீபன்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :