ஜோசியம் பார்ப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியாவில் தமிழக ஜோதிடர் கைது
Teen harassed by Tamil astrologer in Australia
ஆஸ்திரேலியாவில் ஜோசியம் பார்ப்பதாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழகத்தை சேர்ந்த ஜோதிடரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவர் அர்ஜூன் மணியப்பா (31). இவர், ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் உள்ள லிவர்பூல் என்ற பகுதியில் ஜோதிட மையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமிக்கு ஜோதிடம் பார்ப்பதாக கூறி தனது மையத்திற்கு அர்ஜூன் அழைத்து சென்றுள்ளார்.
ஜோசியம் பார்ப்பது போல் நடித்த அர்ஜூன் பின்னர், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியை மீட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி வாய் திறக்காமல் அப்போது மௌனமாக இருந்ததால், அர்ஜூனை போலீசார் கைது செய்யவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூருக்கு அர்ஜூன் தப்பிச் செல்ல இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சிட்னி விமான நிலையத்தில் இருந்த அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.
You'r reading ஜோசியம் பார்ப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலியாவில் தமிழக ஜோதிடர் கைது Originally posted on The Subeditor Tamil
More World News