சக ஆசிரியை பழிவாங்க குழந்தைகளை பலிகடா ஆக்கிய ஆசிரியை - சீனாவில் நடந்த கொடூர சம்பவம்

சீனாவின் கிண்டர்கார்டன் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் குழந்தைகள் என்றுகூட பாராமல் விஷம் கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசூவோ நகரில் மெங்மெங் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று வழக்கம்போல் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் ஒரே நேரத்தில் உடல்நலம் குன்றி போயுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் சோடியம் நைட்ரேட் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துது. இறைச்சியை பதப்படுத்துவதற்காக பயன்படும் வேதிப்பொருள் எப்படி உணவில் கலக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட விவகாரம் போலீஸ் வரை சென்றது.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகளுக்கு உணவு கொடுத்த வாங் என்ற ஆசிரியையிடமும் விசாரணை நடந்தப்பட்டதில் உண்மை வெளிவந்தது. அவர் தான் இந்தக்குற்றத்தை செய்ததும் தெரியவந்தது. அதில், தனதுடன் பணிபுரியும் ஆசிரியை பழிவாங்கவே, அந்த ஆசிரியை இவ்வாறு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையாக தகவல்களை பெற விசாரணை நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். மேலும் மழலையர் பள்ளி மூடப்பட்டதுடன், மற்ற குழந்தைகள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். உடனடியாக 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வளாகம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds