தனது கல்யாணத்தையே தொகுத்து வழங்கிய செய்தியாளர்!
‘ஒரு நாளில் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து மக்களுக்கு சரியான செய்திகளைச் சரியான நேரத்தில் தருபவன்தான் ஒரு பொறுப்புமிக்க செய்தியாளன்’ என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயலாற்றி வருகிறார் பாகிஸ்தான் நிருபர் ஹனான் புகாரி.
ஒரு செய்தியாளனுக்கு கடமையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டியதுதான். அதற்காக தன்னுடைய கல்யாணத்தையும் செய்தியாக்கி தொகுத்து வழங்கும் அளவிற்கா பொறுப்புடன் இருப்பது என சமூக வலைதளங்களில் பலரும் ஹனான் புகாரியின் செயலை நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தானின் ‘சேனல் சிட்டி 41’ என்ற செய்தித் தொலைக்காட்சியின் கள நிருபராகப் பணியாற்றி வருகிறார் ஹனான். ஒவ்வொரு நாளும் களத்திலிருந்து சுடச்சுட செய்திகள் வழங்கிக்கொண்டிருந்த ஹனானுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
பொதுவாக நமது சொந்த வேலைக்காக விடுப்பு எடுக்கும் சூழல் ஏற்பட்டால் அதனால் வேலை எதுவும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டிலிருந்தே பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்வோம். ஆனால், ஹனான் ஒரு நிலை மேலே சென்று தனது திருமண நிகழ்ச்சியையே தொகுத்து வழங்கி தனது வேலையை எந்தத் தொய்வும் இன்றி சிறப்பாகவே ஒளிபரப்பினார்.
இந்தத் திருமண செய்தி பாகிஸ்தானில் மட்டுமல்ல சர்வதேச அளவில் வைரலாகி நல்ல விமர்சனங்களையும், ஹனானுக்குப் பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளது.
ஆனாலும், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா பாஸ்…!
You'r reading தனது கல்யாணத்தையே தொகுத்து வழங்கிய செய்தியாளர்! Originally posted on The Subeditor Tamil
More World News