அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியர்களிடம் ஜோபிடனுக்கு ஆதரவு அதிகரிப்பு.. கருத்து கணிப்பில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு இந்தியர்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. டிரம்ப்பை விட அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அந்த நாட்டில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் நேருக்கு நேராக விவாதிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதிபர் வேட்பாளர்களின் முதல் விவாத நிகழ்ச்சி கடந்த செப்.29ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் வேட்பாளர்கள் கடந்த 7ம் தேதி நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்றனர்.

இந்தியாவில் பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்குப் பின், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலும் டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், சமீப காலமாக இந்தியாவில் மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்து விட்டது. அதே போல், ஹைட்ராக்சி குளோகுயின் மருந்து கேட்டு அதிபர் டிரம்ப், இந்தியாவை மிரட்டும் விதத்தில் நடந்த கொண்டது, எச்1பி விசா கெடுபிடி போன்றவற்றால், இந்திய அமெரிக்கர்களிடையே டிரம்ப்பின் செல்வாக்கு சரிந்து விட்டது.

இந்த சூழலில், ஜான் கோப்ஹின்ஸ் ஸ்கூல் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ், கார்னேஜி அறக்கட்டளை மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இணைந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் ஒரு சர்வே நடத்தின. இந்த கருத்துக் கணிப்பில் இந்தியர்களிடம் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகமாகியிருப்பது தெரிய வந்துள்ளது.இதன்படி, வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள இந்தியர்களில் 72 சதவீதம் பேர் ஜோ பிடனுக்கு ஆதரவாகவும், 22 சதவீதம் பேர் டிரம்ப்புக்கு ஆதரவாகவும் உள்ளனர். இந்திய-அமெரிக்க உறவில் டிரம்ப் அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக 33 சதவீதம் பேரும், அதிருப்தி தெரிவித்து 37 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். 29 சதவீதம் பேர் கருத்துச் சொல்லவில்லை.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதும் கூட ஜோ பிடனுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :