சிறை அல்ல.. சொகுசு வீட்டில் அரசின் பாதுகாப்போடு இருக்கும் மும்பை தாக்குதல் தீவிரவாதிகள்!

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பை நகரைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நகரான மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் மூன்று நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

கடல் வழியே மும்பைக்குள் நுழைந்த பத்து தீவிரவாதிகளால் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சர்வதேச தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், வழக்கில் எந்தவொரு நகர்தலும் இல்லை.

காரணம், பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. எனினும் முக்கியமான குற்றவாளிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது பாகிஸ்தான். இன்று மும்பை தாக்குதல் நடந்த தினம். இன்றைய தினத்தில் இந்திய வெளியுறவு அதிகாரிகள், மும்பை தாக்குதல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், லஷ்கர் இ தொய்பா ஜிஹாத் பிரிவின் தலைவருமான ஜாகி-உர்-ரெஹ்மான் லக்வி இருவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருப்பதாக பாகிஸ்தான் சொல்வது பொய். இருவரும் சமீபத்தில் சந்தித்து ஜிகாத்துக்கு நிதி திரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இருவரையும் பாகிஸ்தான் அரசு பாதுகாக்க பல முயற்சிகளை செய்து வருகிறது என்று கூறியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :