அடிமையாக வாழ விருப்பமில்லை.. மோடி படத்துடன் போராடிய பாகிஸ்தான் சிந்தி மக்கள் பேரணி!

பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் புகைப்படத்துடன் பாகிஸ்தானின் சிந்து மாகாண மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 'சிந்தி' என அழைக்கப்படும் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'சிந்துதேஷ்' தனிநாடு. சிந்து என்பது சிந்து சமவெளி நாகரீகத்தின், வேத மதத்தின் பிறப்பிடமாக பாவிக்கப்படுகிறது. இந்த சிந்து மாகாணத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியிருந்தனர். தொடர்ந்து, கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைபோது சிந்து மாகாணத்தை ஆங்கிலேயர்கள் இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்தனர்.

இருப்பினும் 1947-ம் ஆண்டு முதல் முதலே சிந்துதேஷ் தனிநாடு கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. சிந்து மாகாணம், பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தங்கள் பகுதியை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக சிந்துதேஷ் ஆக மாற்ற வேண்டும் என்று சிந்தி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தனி சிந்துதேஷ் கேட்டு சிந்து மாகாணத் தலைவர் ஜிஎம் சையது, பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் 1967-ம் ஆண்டு முதல் முறையாக போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஜிஎம் சையதுவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி சிந்ததேஷ் போராட்டக்காரர்கள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அடங்கிய படம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டனர். பேரணியில் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பதாகையில் `மோடி - பாகிஸ்தானிடமிருந்து எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்றும் கூறியிருந்தனர்.

சுதந்திர பேரணி தொடர்பாக சிந்துதேஷ் இயக்கத்தின் தலைவர் ஷஃபி முகமது பர்ஃபாத் கூறுகையில், சிந்து மக்கள் அடக்குமுறைக்கு அடிபணிந்து பாகிஸ்தானின் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. எனவே எங்கள் சுதந்திர வேட்கையை ஆதரிக்குமாறு உலக நாடுகளைக் கேட்டு

வருகிறோம். பயங்கரவாத பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோருகிறோம் என்று தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :