உலகில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது

உலகில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 21.50 லட்சத்தை நெருங்குகிறது. நோய் பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட போதிலும் அதன் தீவிரம் இன்னும் குறையவில்லை. அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது அடுத்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டிவிட்டது. புதிதாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவியுள்ளது.

நோய் பாதித்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதற்கிடையே உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7.22 கோடியை தாண்டியுள்ளது. உலகில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் தான் முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்தை தாண்டிவிட்டது. தற்போது இந்தியாவில் 1.84 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே மூன்று லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1.5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 58 லட்சம் பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 4.31 லட்சம் பேர் மரணமடைந்தனர். பிரேசிலில் இதுவரை 88 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 2.17 லட்சம் பேர் மரணமடைந்தனர். இதுவரை 77 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். பிரேசிலை போலவே இங்கிலாந்திலும் நிலைமை மிக மோசமாகவே தொடர்கிறது. இந்தியாவில் தற்போது படிப்படியாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 13,023 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த 131 பேர் மரணமடைந்தனர். தற்போது கேரளாவில் தான் இந்தியாவிலேயே நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி கேரள அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :