ஜிம்பாப்வேயை சேர்ந்தவர்கள் ஜெமி ஃபாக்ஸ் மற்றும் ஸனாலே நிட்லோவ். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
![zimbabwe.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/05/blobid1525862721637.jpg)
திருமணத்திற்கு சில நாட்கள் முன்னர், அதாவது ஏப்ரல் 30-ம் தேதி, இருவரும் ஆப்பிரிக்காவின் மிக நீளமான நதிகளுள் ஒன்றாக ஸாம்பஸியில் படகு பயணம் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஸனாலேவை முதலை தாக்கியது.
![zimbabwe 1.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/05/blobid1525862752983.jpg)
"நான் கத்தினேன். அவளை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தேன். அவளை தண்ணீருக்குள்ளிருந்து கஷ்டப்பட்டு தூக்கினோம். அப்போதும் அவள் வலிக்கிறது என்று சொல்லவில்லை. மருத்துவர்கள் அவள் கையை காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பினேன். முடியவில்லை," என்று ஃபாக்ஸ் கூறியுள்ளார்.
![zimbabwe 2.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/05/blobid1525862801556.jpg)
முதலை கடித்ததால், மணமகள் ஸனாலே நிட்லோவின் வலக்கை துண்டாகி விட்டது. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்து, மருத்துவமனையில் உள்ள சிற்றாலயத்தில் ஜெமி ஃபாக்ஸ் - ஸனாலே நிட்லோவ் இருவரின் திருமணம் நடைபெற்றது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com