வங்கதேச எழுத்தாளர் ஷாஜகான் சுட்டுக்கொலை!
வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் மதச்சார்பின்மை குறித்து தொடர்ந்து பேசிவந்த எழுத்தாளர் ஷாஜஹான் பச்சூ மர்ம நபர்களால் கொல்லப்பட்டு உள்ளார்.
ஷாஜஹான் பச்சூ அவரது சொந்த ஊரான முன்ஷின்கஜ் மாவட்டத்தில் இருக்கும் கக்கல்டியில் இருக்கும் ஒரு மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பகுதிக்கு இரண்டு பைக்குகளில் 5 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அப்போது மருந்துக் கடைக்கு முன்னர் ஒரு வெடிகுண்டுவை அந்த மர்மக் குழு வீசியதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த இடத்திலிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர், ஷாஜஹான் பச்சூவை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்த மர்மக் குழு, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலைக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
போலீஸ் தரப்பும், ஷாஜஹான் பச்சூவின் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் கொலைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு யாராவது ஒருவர் தான் காரணமாக இருப்பர் என்று யூகிக்கப்படுகிறது. மதச்சார்பின்மை குறித்து வெளிப்படையாக பேசி வந்ததால், இதற்கு முன்னரும் ஷாஜஹான் பச்சூவுக்கு அடிப்படைவாதக் குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
You'r reading வங்கதேச எழுத்தாளர் ஷாஜகான் சுட்டுக்கொலை! Originally posted on The Subeditor Tamil
More World News