தாய்லாந்து குகையில் சிக்கிய பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம்

Jul 7, 2018, 18:49 PM IST

தாய்லாந்து நாட்டில் 9 நாட்கள் குகைக்குள் சிக்கித் தவித்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் குகைக்குள் இருந்து பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் பணி தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சிறுவர்களின் பெற்றோரர்களுக்கு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவோங்.

‘உங்கள் குழந்தைகள் அனவரும் நன்றாக உள்ளனர். உங்கள் குழந்தைகளை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன். அவர்களின் பெற்றோர்களாகிய உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனது பாட்டி மற்றும் அத்தைக்கு, நான் நன்றாக இருக்கிறேன். கவலைப் படாதீர்கள். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று சந்தாவோங் எழுதியிருந்தார்.

தற்போது அச்சிறுவர்கலின் பெற்றோர் கோச்-க்கு பதில் கடிதம் எழுதியுள்ளனர். அதில், "உங்களை குறைபட்டுக் கொள்ள வேண்டாம் ; உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை ; உங்களை முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

You'r reading தாய்லாந்து குகையில் சிக்கிய பயிற்சியாளருக்கு பெற்றோர்கள் கடிதம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை