தாய்லாந்து குகைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை
தாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரையும் மீட்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பை கருதி அந்த குகைக்கு சீல் வைத்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற 10 கி.மீ நீள குகைக்கு கடந்த வாரம் கால்பந்து அணியை சேர்ந் 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர் சென்றிருந்தனர். இவர்கள், அந்த குகைக்குள் சென்று சாகச பயணம் செய்தனர்.
அப்போது, அங்கு திடீர் மழை பெய்ததை அடுத்து, குகைக்குள் நீர் புகுந்தது. இதனால், அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, மீட்பு படையினர் விரைந்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக இரண்டு பேர், பின்னர் நான்கு பேர் என, குகைக்குள் சிக்கி இருந்த அனைவரையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட குகைக்குள் மீண்டும் யாரும் சிக்காமல் இருக்க பாதுகாப்பை கருதி, குகைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
You'r reading தாய்லாந்து குகைக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை Originally posted on The Subeditor Tamil
More World News