வீட்டு வாடகை கட்டத் தவறிய 93 வயது மூதாட்டிக்கு சிறைத் தண்டனை!

அமெரிக்காவில் வீட்டு வாடகை செலுத்தத் தவறிய 94 வயது மூதாட்டிக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Juanita Fitzgerald

ஜானிதா ஃபிட்ஸ்ஜெரால்ட் என்ற 94 வயது மூதாட்டி ஒருவர் நேஷனல் ரெஸிடன்சி குடியிருப்பில் உள்ள கரேன் ட்வினெம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குடியிருந்து வருகிறார்.

ஆனால், அவரால் கடந்த மூன்று மாதங்களாக வாடகை செலுத்த இயலவில்லை. இதனையடுத்து வீடற்றவர்களுக்கான கூட்டமைப்பு உள்ளிட்ட பல சேவை மையங்களிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை ஈஸ்டிஸ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் லேக் கண்ட்ரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர், அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மேலும், ஃபிட்ஸ்ஜெரால்ட் 500 டாலருக்கு கடன் பத்திரங்கள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையெனில் வருகின்ற 27ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.