சிலியில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி: இதன் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்
சாண்டியாகோ: சிலி நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருப்பதாகவம் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிலி நாட்டில் கன மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் நீர் நிரம்பி வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இந்நிலையில், சிலியின் சுற்றுலா பகுதியான வில்லா சாண்டா லூசியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. பலர் மாயமான நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது, மேலும் 6 சடலங்கள் கைப்பற்றப்பட்டதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதன் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
You'r reading சிலியில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி: இதன் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் Originally posted on The Subeditor Tamil
More World News