இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்தாண்டு ஆர்தர் அஷ்கின், டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட் ஜிரார்டு மவ்ரு ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பெருமைக்குரிய விருதாக பெயர் பெற்றுள்ள நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஆலீஸன் மற்றும் ஹோஞ்ஜோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு மதியம் சுமார் 3.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு ஆர்தர் அஷ்கின், டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட், ஜிரார்டு மவ்ரு ஆகிய மூவருக்கும் இயற்பியலக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்தர் ஆஷ்கின் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஜிரார்டு மவ்ரு பிரான்ஸ் நாட்டையும், டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆவர். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
You'r reading இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு. Originally posted on The Subeditor Tamil
More World News