பாகிஸ்தானில் இன்று இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் இடைத்தேர்தல் தொடங்கியது.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதன்பிறகு, ஒரு தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

பிரதமர் இம்ரான் கான் அந்த தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், 35 தொகுதிகள் காலியாக இருந்துது. இதையடுத்து, 35 தொகுதிகளுக்கு இன்று (14.10.2018) தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 35 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த 35 தொகுதிகளில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகளும், மீதம் சட்டமன்ற தொகுதிகளும் ஆகும். 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். இறுதியாக, 372 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், இந்த 35 தொகுதிகிளல் இருந்து மொத்தம் 50 லட்சத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 23 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள், 27 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர்.

ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் முக்கியமானதாக அமைந்துள்ள இந்த தேர்தலில் வெற்றுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை செய்து வெற்றியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds