ரயில் மேற்கூரை துளையிட்டு கொள்ளை: 2 ஆண்டுக்கு பின் இருவர் கைது

ஓடும் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சுமார் ரூ.323 கோடி பழயை, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்க கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு ரயில் புறப்பட்டது. மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தது. பின்னர், பணம் இருந்த ரயில் பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்துப் பார்த்தபோது, ரூ.5.78 கோடியை மர்ம ஆசாமிகள் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சேலம் ஜங்ஷன் அல்லது எழும்பூர் ரயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ள என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், 2 ஆண்டுக்கு மேல் ஆகியும் கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. மத்திய அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்ற நாசா சேலம் ஜங்ஷனில் இருந்து வந்த ரயிலின் 350 கி.மீ., தூரத்தை செயற்கைகோள் மூலம் புகைப்படங்களாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்திற்கும் விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதான இருவர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பின்னர், ரயில் விருதாசலம் வந்ததும் பணக்கட்டுகளை கூட்டாளிகளிடம் கொடுத்தோம். பின்னர், ரயில் நிலையத்தில் இறங்கி கூட்டாளிகளுடன் மத்திய பிரதேசகத்திற்கு இவர்கள் தப்பியதாக கூறியுள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds