பிரபாகரன், பொட்டு அம்மான் தப்பிச் செல்ல முயற்சித்தது உண்மை... ஆனால்? சரத் பொன்சேகா பரபரப்பு தகவல்

இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகளின் தலைவர் சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் நாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது; பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார் என முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொட்டு அம்மான் நார்வேயில் உயிருடன் இருக்கிறார் என கருணா தெரிவித்த கருத்து இலங்கையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகா நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் சரத் பொன்சேகா கூறியதாவது:

இறுதி யுத்தத்தின் போது வடக்கு கடற்கரை மூலம் பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். நாங்கள் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தினோம்.

இதில் பிரபாகரன், சூசை உள்ளிட்டோர் மரணித்தனர். பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தார். நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மானின் மனைவி ஆகியோரது சடலங்களை மட்டும் மீட்டோம்.

பொட்டு அம்மான் சடலம் கிடைக்கவில்லை. போரின் இறுதி நாட்களில் பிரபாகரனுடன்தான் பொட்டு அம்மான் இருந்தார். அவர் நார்வேக்கு தப்பி செல்லவே இல்லை.

இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds